Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பணக்காரர்கள் யார்? பார்ப்பனர்கள் 49.9% பிற்படுத்தப்பட்டோர் 15.8% தாழ்த்தப்பட்டோர் 9.5% இந்த நிலையில் பொருளாதார அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குற்றமே!

$
0
0

கல்வியிலும் பார்ப்பனர்களே முதலிடத்தில்!

'எகானாமிக் டைம்ஸ்' ஏடு ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துகிறது

புதுடில்லி, மே 18 பொருளாதார நிலையில் பார்த்தாலும்கூட பார்ப்பனர்கள் பணக்காரர்கள் 49.9%. அப்படி இருக்கும்பொழுது பொருளாதார அடிப் படையில் அவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எப்படி சரியாகும்?

'தி எகானாமிக் டைம்ஸ்' ஏடு அம்பலப்படுத்தும் புள்ளி விவரங்கள் இதோ:

பார்ப்பன - உயர்ஜாதியினர்க்கு மோடி அரசு அளித்த 10% இட ஒதுக்கீடு எனும் சமுக அநீதியை தோலுரிக்கும் கட்டுரை.

('எகானாமிக் டைம்ஸ்' பத்திரிக்கையில் (மே 12-19, 2019), சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் ருக்மணி அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கம்)

இந்தத் தேர்தலில், உயர்ஜாதியினர் வருமானத்தின் அடிப்படையில் இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஒன்று, பாஜக, உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு உதவிட வேண்டும் என்பதன் அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு; இரண்டாவது, பணக்காரர்களுக்கு (பெரும்பாலும் உயர்ஜாதியினர்) 2% வரி கூடுதலாக விதிக்கப்படும் என்ற சமாஜ்வாடி கட்சியின் வாக்குறுதி. இந்திய மனிதவள மேம்பாடு மற்றும் தேசிய குடும்ப சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 2018 இல்  நிதின் குமார் பாரதி, பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ் அவர்கள் வெளியிட்ட தகவலை ஆதாரமாகக் கொண்டு ருக்மணி அவர்கள் இந்த கட்டுரையை எழுதி உள்ளார்.

உயர்ஜாதியினரின் வருமானம் எந்த அளவில் உள்ளது?

கல்வியில் அதிக ஆதிக்கம்:

பாஜகவின் 10% இடஒதுக்கீடு, உயர்கல்வி நிலையங்களிலும் ஏழை உயர்ஜாதியினர்க்கு இட ஒதுக்கீடு அளிப்பது. தற்போது, பிற்படுத்தப் பட்டோரைக் காட்டிலும், உயர்ஜாதியினரே, அதிக கல்வி ஆண்டுகளைப் பெற்றுள்ளனர். உயர்கல்வியில், பார்ப்பனர்கள் 11.5 கல்வி ஆண்டுகள் பெறுகிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு 7.8 கல்வி ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 6.7 கல்வி ஆண்டுகளும், முஸ்லிம்கள் 6.6 கல்வி ஆண்டுகளும், பழங்குடியினர்க்கு 5.9 கல்வி ஆண்டுகளும்தான் பெற முடிகிறது.

அதிக செல்வ வளத்தோடு இருப்போர் யார்?

பார்ப்பனர்கள் 49.9% செல்வ செழிப்போடு இருக்கிறார்கள். மிகவும் ஏழைகள் என்போர் பார்ப்பனர்களில் 4.6% தான்.

இதுவே, பிற்படுத்தப்பட்டோரில் 15.8% பணக்காரர்களாகவும், 18.9% மிகவும் வறியவர்களாகவும் உள்ளார்கள். தாழ்த்தப்பட்டோரில் 9.5% வசதி படைத்தவர்களாகவும், 28.4% ஏழைகளாகவும் உள்ளார்கள்.

உயர்ஜாதியினரில், பனியாக்கள் 43.6% பணக்காரர்களாகவும், 5.8% ஏழைகளாகவும் உள்ளார்கள்.

ஆக, உயர்ஜாதியினரில், பார்ப்பனர்களே, அதிக வசதி படைத்தவர் களாகவும், ஏழ்மையில் இருப்போர் மிகக் குறைவாகவும் உள்ளார்கள்.

மாநில வாரியாக செல்வ செழிப்பில் அதிகம் உள்ளோர் யார்?

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அவர்கள்தான் செல்வந்தர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில், உயர்ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளார்கள்.

எடுத்துக்காட்டாக, வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், குஜராத், மகாராட்டிரா, மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, தென் மாநிலங்களான, தமிழகம், கருநாடகம், ஆந்திர பிரதேசம், கேரளா என அனைத்து மாநிலங்களிலும், பார்ப்பனர்களின் வருமானம் என்பது, ஏனைய உயர்ஜாதி மற்றும் இதர சமுகத்தினரைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

வேலை வாய்ப்பில் பார்ப்பனர்களின் நிலை: மத்திய அரசின் உயர்ஜாதியினர்க்கான 10% இட ஒதுக்கீடு, அரசின் பணிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், இந்திய மனிதவள மேம்பாடு ஆய்வின்படி, பார்ப்பனர்கள் 44% அரசின் அனைத்துப் பணிகளிலும் உள்ளனர். உயர்ஜாதியினர் 35%, பிற்படுத்தப்பட்டோர் 19%, தாழ்த்தப்பட்டோர் 18%, முஸ்லீம் 15%, பழங்குடியினர் 13% என்ற நிலையில் தான் உள்ளனர்.

தமிழாக்கம் மற்றும் தொகுப்பு:

கோ.கருணாநிதி,

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர்


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles