தலைவர் - கொள்கை - கழகம் இவற்றிற்கு முழுமையாக தங்களை ஒப்படைத்து தி.மு.க. தோழர்களே பணியாற்றுவீர்-வெற்றி தானாக வந்து சேரும்!
காலில் விழுவது, ஆடம்பரமான வகையில் பதாகைகள், கட்-அவுட்டுகள் வைப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும், சால்வை களுக்குப் பதில் நூல்கள் வழங்கவேண்டும் என்கிற வகையில் தி.மு.க. தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டு இருப்பதை வரவேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தலைவர் - கொள்கை - கழகம் (இயக்கம்) இவற்றிற்கு உண்மையாக, விசுவாசமாக இருந்து ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றினால், வெற்றி என்பது தி.மு.க. வுக்குத் தானாகவே வந்து சேரும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தி.மு.க. தலைமைக் கழகத்தின் அறிவிப்பு
காலில் விழும் கலாச்சாரம், ஆடம்பர மோகம் வேண்டாம் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித் துள்ளது. அதன் விவரம் வருமாறு: தி.மு. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல் தலைவராகப் பொறுப்பேற்றபோதே, கழக நிர்வாகி களும், தொண்டர்களும் தனது காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்மானம் - சுயமரி யாதை - பகுத்தறிவு செறிந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அடையாளமாக, நெஞ்சம் நிமிர்த்தி அன்பு ததும்ப வணக்கம்'' செலுத்துவதே தலைமைக்குத் தரும் மரியாதை'' என்பதையும் தலைவர் மு.க.ஸ்டாலின் அப் போதே குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அவர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்க வருகின்ற பலரும், ஆர்வ மிகுதியால் அவர் காலில் விழ முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனத் தலைமைக் கழகத்தின் சார்பில் வலி யுறுத்தப்படுகிறது. கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவிப்பதே, திராவிட முன்னேற்றக் கழகம் போற்றி வளர்த்து வரும் பண் பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும்.
எனவே, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலில் விழ எத்தனித்து, அவருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்து வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மாலைகள், சால்வைகளுக்குப் பதில் புத்தகங்கள்!
மாலைகள், சால்வைகள் ஆகியவற்றுக்குப் பதில் புத்தகங்களைப் பரிசாக அளிக்கும் நற்செயலே சாலச் சிறந்ததாகும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். அவரது பிறந்த நாள், பொதுக்கூட்ட நிகழ்வுகள் உள்பட அவர் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் வழங் கப்படும் புத்தகங்கள், தமிழ்நாட்டில் உள்ள பல நூலகங் களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு பொதுமக்களுக் கும், மாணவர்களுக்கும் நல்ல முறையில் பயன்பட்டு வருகின்றன. தலைவர் அவர்களைத் தேர்ந்தெடுத்த கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், மாவட்டக் கழக அலுவலங்களில் கட்டாயமாக நூல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நகர, ஒன்றிய, கிளை அலுவலகங்களிலும் நூலகங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அப்படி அமையும் கழக நூலகங்கள் அனைத்திற்கும் தொண்டர்களும், நிர்வாகி களும், பொதுமக்களும் அளிக்கும் புத்தகங்களை அன் பளிப்பாக வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, கழகத் தலைவரைக் காண வரும்போது பரிசளிக்க விரும்புவோர், ஆடம்பரம் மிகுந்த சால்வைகள் - மாலைகளைத் தவிர்த்து, அறிவு வளர்ச்சிக்குத் துணை நிற்கும் புத்தகங்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில்....
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கழக நிகழ்ச்சிகளிலும் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் அதிக அளவிலான பேனர்கள் நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தலைவர் அவர்கள் ஏற்கெனவே வலியு றுத்தியுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் இடம் - நேரம் - நாள் இவற்றை அறிந்து கொள்ள முக்கியமான இடங்களில் மட்டும் வைத்திட ஏதுவாக, ஒரு சில பதாகைகள் போதும் என்ப தையும், ஆடம்பர பேனர்களுக்குப் பதில், கழகத்தின் கொள்கை பட்டொளி வீசிப் பறக்கும் வகையில் இருவண்ணக் கொடியும் - தோரணமும் விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதனைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கட்டடாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தலைமைக் கழகம் மீண்டும் வலியுறுத்துகிறது.
பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த - தலைவர் கலை ஞர் அவர்கள் காலமெல்லாம் காத்து வந்த கடமை - கண்ணியம் கட்டுப்பாடு எனும் இலட்சியத்தை உயர்த்திப் பிடித்துக் கட்டிக்காப்போம். பேனர்கள் போன்ற ஆடம் பரங்களையும், காலில் விழுந்து கவனத்தைக் கவர்வது போன்ற அடிமைத்தனங்களையும் விட்டொழிப்போம். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான வேண்டுகோளைத் தவறாது நிறைவேற்றி, அரசியலில் உயர்ந்த பண்பாடு செழித்தோங்க ஒத்துழைப்போம்!'' என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி''யில் (1.9.2018) தி.மு.க.வின் தலைமைக் கழகத்தின் மேற்கண்ட அறிவிப்பு, மிகவும் பாராட்டிப் போற்றி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இதனை அனைவரும், கண்டிப்பாக கடைப்பிடிப்பது என்பதுதான் அதனை செயல்படுத்தும் சரியான வழி யாகும்!
அதி முக்கியம் கட்டுப்பாடு' என்பதற்கே தரப்படல் அவசியம்!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது முக்கியம் என்றாலும், அதி முக்கியம் கட்டுப்பாடு' என்பதற்கே தரப்படல் அவசியம்! என நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கூறினார்.
கடமை, கண்ணியம் என்பதற்கு சூழ்நிலைகளுக் கேற்ப வியாக்கியானங்களும், புரிதல்களும்கூட மாற லாம்; ஆனால், கட்டுப்பாடு' என்பதற்கு எங்கும், எப் போதும் ஒரே பொருள்தான் உண்டு; இருவேறு விளக் கங்களோ, வியாக்கியானங்களோ சொல்ல முடியாது'' என்றார்.
கலைஞருக்குச் செலுத்தும் சரியான காணிக்கை'யாகும்!
எனவே, திராவிடரின் அரசியல் இயக்கமாக உள்ள தி.மு.க.வினர்,
1. தலைவர்
2. கொள்கை
3. கழகம் (இயக்கம்)
இம்மூன்றிடம் தங்களை ஒப்படைத்து, உண்மையாக உழைப்பதுதான் கலைஞருக்குச் செலுத்தும் சரியான காணிக்கை'யாகும்.
புதிய தலைவரின் ஆணையை ஏற்று செயல்பட்டால்...
இராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்கி வரும் ஒரு இயக்கத்திற்கு எந்தத் தேர்தல் ஆனாலும், இடைத்தேர் தலோ, பொதுத் தேர்தலோ எதுவானாலும், போட்டியிடும் வேட்பாளர் கலைஞர்தான் என்ற எண்ணத்தை மனதில் நிலைநிறுத்தி, இராணுவக் கட்டுப்பாட்டுடன் புதிய தலைவரின் ஆணையை ஏற்று செயல்பட்டால், தி.மு.க.வின் வெற்றி வாகை இயல்பாகவே நமக்குக் கிட்டும்!
மக்கள் தயாராகவே உள்ளார்கள்; இயக்கத் தோழர்கள் அதைச் சரிவரப் புரிந்து தங்களை முன்னி லைப்படுத்தாமல், இயக்கம், கொள்கை - தலைமை என்பதையே முன்னிறுத்திப் பாடுபட சூளுரை மேற் கொள்ள வேண்டுமென தாய்க்கழகம் உரிமையுடன் வேண்டுகிறது!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
தஞ்சாவூர்
1.9.2018