Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

"மனுவாதி பாஜகவை அப்புறப்படுத்துவோம்!"

$
0
0

டில்லியில் பேரணி

புதுடில்லி,டிச.21தலித்உரிமைகளைப் பாதுகாத்திடுவோம், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடுவோம், மனுவாதி பாஜகவை அப்புறப்படுத்துவோம் என்ற முழக்கங்களுடன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வியாழக்கிழமையன்று தலைநகர் டில்லியில் நாடாளுமன்றம் நோக்கி, பேரணி- ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்பேரணி-ஆர்ப்பாட்டம் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பில் நடைபெற்றது.பேரணியில் வந்த வர்கள் நாடாளுமன்ற வீதிக்கு வந்தபின் அங்கே தலைவர்கள் உரையாற்றினார்கள்.

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன் னணியின் தலைவரும் கேரள சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான ராதாகிருஷ் ணன் உரையாற்றுகையில்,

மோடி அரசாங்கம், தலித்துகளுக்கு விரோதமான அரசாங்கம் என்று கூறி னார். கடந்த நான்கரை ஆண்டு கால மோடி ஆட்சியில் தலித்துகளுக்கு நீதி வழங்கக்கூடிய விதத்தில் ஒரு நடவ டிக்கையைக்கூட எடுத்திடவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மனுதர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யும் மோடி அரசாங்கத்தைத் தூக்கி எறிந்திட தொழிலாளர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலித் ஒடுக்குமுறைவிடுதலைமுன்னணி யின்துணைத்தலைவரானசுபாஷினி அலி, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தலித்துகளுக்கு அளிக்கப்பட்ட உரிமை களைப் பறித்திடும் சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசி யத்தை விளக்கினார்.

அரசமைப்புச் சட்டத்துக்கு அறைகூவல்!

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ராமச்சந்திர டோம் பேசுகையில், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தலித்துகள் மீது பல முனைகளில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்றும், டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் ஜாதிய, மதவெறி சக்திகளின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்திருக்கின்றன என்றும், இவற்றுக்கு முடிவு காண் பதற்காகத்தான் இந்தப் பேரணி என் றும், அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம், தலித் உரிமைகளைப் பாது காப்போம் என்றும் கூறினார். பேரணி-ஆர்ப்பாட்டத்தில் பழங்குடிமக்கள் தேசிய அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந் திர சவுத்ரி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.கே.பிஜு, ஜர்னதாஸ் முதலானவர்களும் உரையாற்றினார்கள்.

9 ஆவது அட்டவணையில் இணைத்திடுக!

ஜாதியம், மதவெறியை எதிர்த்துப் போராட வேண்டும், தலித்,- பழங்குடியி னர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும், தலித்,- பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்தை அமல்படுத்து, தலித்- பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டத்தை அரசமைப்புச்சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைத்திடுக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலித்துகள்- பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துக, காலியிடங் களை உடனடியாக நிரப்பிடுக, தலித்,- பழங்குடியினர்பதவிஉயர்வுக்குகிரி மிலேயர்ஷரத்துக்களைஅமல்படுத் தாதே, நிலமற்ற தலித்,- பழங்குடியினருக் குப் போதுமான அளவிற்கு நிலப்பட்டா வழங்கிடு.

துணைத் திட்ட ஒதுக்கீட்டை குறைக்காதே!

தலித்,பழங்குடியினர்துணைத்திட் டத்தின்ஒதுக்கீட்டைக்குறைக்காதே, மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படை யில் துணைத் திட்டத்திற்கான தொகையைஒதுக்கிடு,அனைத்துஉயர் கல்வி நிலையங்களிலும் ரோகித் சட் டத்தை அமல்படுத்திடு, சிறையில் வைக்கப்பட்டுள்ள தலித் ஆதரவு செயற்பாட்டாளர்களை விடுதலை செய், தலித்துகளுக்கு எதிராகப் புனையப் பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை கொடு, குறைந்த பட்சக் கூலியை 350 ரூபாயாக உயர்த்திடு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்து, அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் வீடுகள் வழங்கிடு முதலான கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles