சென்னை, செப்.12 உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்று கூட தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக இடம் பெறாதது குறித்து அமெரிக்காவின் டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்ட பட்டியலை விவரித்து டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகின் தலைச்சிறந்த பல் கலைக்கழகங்களின் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம்ஸ்' நாளிதழ், உலகம் முழுவதிலுமுள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக் கழக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் முதலிடத்திலும், அமெரிக்காவின் கலி போர்னியா பல்கலைக்கழகம் இரண்டாமிடத் தையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் மூன்றா மிடத்தையும் பிடித்துள்ளன.
முறையே 4, 5 இடங்கள்
அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான் போர்டு, மசாசூசெட், பல்கலைக்கழகங்கள் முறையே 4, 5 இடங்களை பெற்றுள்ளன. அதே சமயத்தில் உலகின் சிறந்த 300 பல்கலைக்கழகங்களின் பட்டியலிலும் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக் கழகமும் இடம்பெறவில்லை.
டில்லி, கரக்பூர், ரோபார், இந்தூர் ஆகிய தொழில்நுட்பக் கழகங்கள் அனைத்தும் 300 இல் இருந்து 600 வரை உள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளன. உலகின் 92 நாடுகளில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வின்படி இந்தப் பட்டியல் தயா ரிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ்' ஏடு தெரிவித்து ள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் ஆட்டோமொபைல், உணவுத்துறை, ஜவுளித்துறை உள்ளிட்ட பல துறைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், மோடி ஆட்சியில் கல்வித்துறையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அதிருப் திக்கும் ஆளாகியுள்ளனர்.
2014-ஆம் ஆண்டு முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மனித வளத்துறை அமைச் சராக இருந்த ஸ்மிருதி இரானி இந்திய பல் கலைக்கழகங்களை உலகின் முதல்தரமான பல் கலைக் கழகங்களுள் ஒன்றாக மாற்றுவதே மோடியின் முதல் பணி என்று கூறியிருந்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டு முதல் நல்ல நிலையில் இருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்களது இடத்தில் இருந்து சறுக்கிக்கொண்டே வந்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது.