Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பழைய, புதிய புரோகிதர்கள் யார் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது! நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் எச்சரிக்கை

$
0
0

சென்னை, நவ.19 நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. பதவிக்காக சலாம், குலாம் போடுபவர்களை வைத்து, தமிழ்நாட்டை குத்தகைக்கு எடுக்கலாம் என்று  எண்ணாதீர்கள், இது பெரியார் மண். எந்த பழைய, புதிய புரோகிதர்கள் யார் வந்தாலும், எந்த சங்கடங்கள் வந்தாலும், திராவிட இயக்கத்தை அழிக்க எவராலும் முடியாது என்று நீதிக் கட்சி 101ஆம் ஆண்டு விழாவில் பேசுகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  எச்சரிக்கை விடுத்தார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சியின் 101ஆம் ஆண்டு விழா  சிறப்புக்கூட்டம் நேற்று (18.11.2017) மாலை 6 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

இனமான பேராசிரியருக்கு

தமிழர் தலைவர் பயனாடை அணிவிப்பு

விழாவில் இனமான பேராசிரியர் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பி. தியாகராசன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இயக்க வெளியீடுகளை அளித்து சிறப்பு செய்தார்.

நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழா சிறப்புக்கூட்டம் நீதிக்கட்சித் தலைவர்கள் படத்திறப்பு, நீதிக்கட்சி தொடர்பான  நூல்கள் வெளியீடு மற்றும் தலைவர்களின் எழுச்சிமிக்க உரைகளுடன்  பொலிவுடன் நடைபெற்றது.

தலைவர்கள் தமது உரைகளில் நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தின் 101 ஆண்டு சாதனைகளை எடுத்துக்காட்டி, தற்போது அதன் கொள்கைகளுக்கு ஏற்பட்டுவருகின்ற அறைகூவல்கள்குறித்த எச்சரிக்கையை விடுத்தனர்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தலைமை வகித்தார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் வரவேற்புரையாற்றினார். திரா விடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் அறிமுக உரையாற்றினார்.

நீதிக்கட்சித் தலைவர்கள் கொள்கைவழியில் வாழ்ந்து வழிகாட்டியவர்கள், இனமான பேராசிரியர் உரை

நீதிக்கட்சித் தலைவர்கள் படத்தைத் திறந்து வைத்துதிமுக பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் விழாவில் கலந்து கொண்டு, நீதிக்கட்சித் தலைவர்கள் டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், பிட்டி தியாகராயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்து  சுருக்கமாக சிறப்புரையாற்றினார்.

இனமான பேராசிரியர் உரையில் குறிப்பிட்டதாவது:

நான் எதிர்பாராத நிகழ்ச்சி இது. கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீதிக்கட்சித்தலைவர்கள் நமக்கெல்லாம் ஆக்கம் கொடுத்தவர்கள். துணை நின்றவர்கள். நீதிக்கட்சியினர் கொள்கை தந்தவர்கள். அவர்கள் இல்லையென்றால், இந்த இயக்கம் இல்லை. கொள்கைகளின்படி, அவர்கள் வாழ்ந்து, வழிகாட்டிய வர்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு நீதிக்கட்சித் தலைவர்களின் படங்களைத்திறந்துவைத்து உரையாற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு உளமார்ந்த நன்றி. அதிகம் பேச முடியாத இக்கட்டான உடல்நிலை எனக்கு உள் ளது. உளமார்ந்த உள்ளார்ந்த நிலையை உணர்ந்து ஏற் பீர்கள். நன்றி.

இவ்வாறு சுருக்கமாக உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் கொள்கைகளுக்கு அறைகூவல் ஏற்பட் டுள்ளதாகக் குறிப்பிட்டு எழுச்சியுரை யாற்றினார்.

ஆசிரியர் உரையில் குறிப்பிட்டதாவது:

நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழா என்பது வெறும் பெருமைகளை மட்டும் பேசுவதற்கு அல்ல. மிகப்பெரிய அறைகூவல்கள் ஏற்பட்டு வருகின்றன. வரலாற்றை திரிப்பது என்பதை திட்டமிட்டு செய்கிறார்கள்.

நீதிக்கட்சித் தலைவர்கள்- முதல் தலைமுறையைச் சேர்ந்த இனமான பேராசிரியர் எப்போதும் எங்களுடன் இருப்பவர். அவரைத் தொடர்ந்து நாங்கள், அடுத்து  நாங்கள் வழிநடத்தக்கூடிய இளைஞர்கள் என நான்கு தலைமுறைகளாக இந்த கொள்கைளை முன்னெடுத்து செல்கிறோம்.

வாரிசு அரசியல் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். கொள்கைகளை சுவாசமாகக் கொண்டிருப்பது பெருமையாகும். நீதிக்கட்சித் தலைவர் பிடிராசன், அவர் மகன் பிடிஆர் பழனிவேல்ராசன்,  தற்போது பிடிஆர்பி.தியாகராசன் வந்துள்ளார்.

suக்ஷீஸ்வீஸ்ணீறீ வீஸீ tலீமீ யீவீttமீst என்கிற வகையில் கொள்கை வழியில் தியாகராசன் இருக்கிறார்.

தலைமைச் செயலகத்திலேயே புரோகிதம் மற்ற எல்லா காலங்களையும் விட இன்றைக்கு நுழைகிறது.

சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, நீதிக்கட்சி, திராவிட இயக்க கொள்கைகளுக்கு அறைகூவல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆரியம் விதைக்காது விளையும் கழனி என்றார் அண்ணா.

படித்தவர்களை விட படிக்காதவரான தந்தை பெரியார்தான் துணிச்சலான அடிக்கல் நாட்டியவர். ளிக்ஷீவீரீவீஸீணீறீ ஜிலீவீஸீளீமீக்ஷீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ பெரியார் சுய சிந்தனையாளர் ஆவார்.

காங்கிரசில் பெரியார் இருந்தபோது, நீதிக்கட்சி ஆட்சியில் கோயில் பெருச்சாளிகளை ஒழிக்க, 1922ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1924ஆம் ஆண்டில்தான் இந்து அறநிலைய சட்டம் கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியார் தனக்கு கட்சி இல்லை கொள்கைதான் என்றார்.

அண்ணா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, அற நிலையத்துறைக்கு நாவலரை அமைச்சராக்கினார். சிதம்பரம் சென்ற நாவலரை சிதம்பரம் கோயிலுக்கு அழைத்தார்கள். அங்கு சென்று, அண்ணாமலை பல்கலைக்காகத்தில் பேசியபோது, கணக்கு வழக்கை பார்ப்பதுதான் தம் பணி என்றார். இப்போது இருப்ப வர்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பூஜைகள் குறித்து இல்லாமல், கோயில்களில் கணக்கு  சரிபார்ப்பது தான் அந்த துறையின் பணி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் கொள்கைகள் இன்றைக்கு செயல்படுத்தப் பட்டு வருகின்றன. கேரளாவில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகின்றனர். கருநாடகாவில் மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பதவியைக் காத்துக்கொள்ள அடிமை யாக இருக்கிறார்கள். பாபாசாகேப் அம்பேத்கர் சொல் வார், அடிமையாக இருப்பதில் சுகம், சுவை காண்கிறான் என்று அம்பேத்கர் சொல்வார். அதுபோல் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

பெரியார் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார். கடவுள் இல்லை என்கிறீர்களே, யார் அர்ச்சகராக இருந் தால் என்ன? என்று கேள்விக்கு தந்தை பெரியார்  பதி லாகக் கூறும்போது, ஆதிதிராவிடர், நம்மாள்கள் அர்ச்சகரானால், பார்ப்பானே கடவுள் இல்லை என்பான் என்றார்.

இந்து மதம் மக்களை ஜாதியால் பிரித்தது. பிரிக்கப் பட்ட மக்களை ஒன்றாக்கிய இயக்கம் திராவிட இயக்கம்.

இன்றைக்கு இரண்டு வித ஆயுதங்களைக் கொண்டி ருக்கின்றனர். யாரை மிரட்ட முடியும்? என்று பார்க்கின் றனர். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. அழிக்க முடியாது. நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. பதவிக்காக சலாம், குலாம் போடுபவர்களை வைத்து, தமிழ்நாட்டை குத் தகைக்கு எடுக்கலாம் என்று  எண்ணாதீர்கள், இது பெரியார் மண். எந்த பழைய, புதிய புரோகிதர்கள் வந்தாலும், எந்த சங்கடங்கள் வந்தாலும், திராவிட இயக்கத்தை அழிக்க எவராலும் முடியாது.

இவ்வாறு நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழாவில் பேசுகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  எச்சரிக்கை விடுத்தார்.

நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும், மேனாள் முதல்வருமாகிய பி.டி.ராசன் பெயரனும், தமிழக சட்டமன்ற மேனாள் அவைத்தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் மகனுமாகிய மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் பி.டி.ஆர்.பி.தியாகராசன் கருத்துரையாற்றினார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய துணைத் தலைவர் முனைவர் ஏ.தானப்பன் நன்றி கூறினார்.

நூல்கள் வெளியீடு

நீதிக்கட்சி 101-ஆம் ஆண்டு விழாவில் நீதிக்கடசி தொடர்பான மலிவுப்பதிப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. நீதிக்கட்சி வரலாறு (ரூ.25), நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக? (ரூ.11), ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் (ரூ.70), திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் -தேவையும் (ரூ.15) ஆகிய நூல்கள் நன்கொடை ரூ.121. சிறப்புக்கூட்டத்தையொட்டி ரூ.21 கழிவு அளிக்கப்பட்டு, ரூ.100க்கு அளிக்கப்பட்டது-.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் கி.சத்தியநாராயணன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், கவிஞர் கண்மதியன், புலவர் பா.வீரமணி, வா.மு.சே.திருவள்ளுவர், கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், வடசெடன்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி, மாணவரணி தொண்டறம், ஆவடி முத்துகிருஷ்ணன், செந்துறை இராசேந்திரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தாம்பரம் இலட்சுமிபதி, தென்.மாறன், பழ.சேரலாதன், விஜய் ஆனந்த், கெடார் மும்மூர்த்தி, அம்பத்தூர் இராமலிங்கம் உள்பட ஏராளமானவர்கள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

கலந்துகொண்டவர்கள்

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  மேனாள் அமைச்சர் கவிஞர் வேழவேந்தன், திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, மு.பி.பாலசுப்பிரமணியம், கயல் தினகரன், சி.வெற்றிசெல்வி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர்  பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  கோவி.கோபால், பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அரும்பாக்கம், சா. தாமோதரன், பூவை பெரியார் மாணாக்கன், அருணாசலம், மருத்துவர்கள் க.வீரமுத்து, மாலதி, தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன் உள்பட ஏராளமானவர்கள் நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழா சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

 


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles