Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto)

$
0
0

"உலகமே ஒரு குடும்பம்'' என்னும்  தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் திராவிடத் தத்துவம்

சென்னை பெரியார் திடலில் மானுட சமத்துவப் பொன் மழை!

நமது சிறப்புச் செய்தியாளர்

தஞ்சையில் 23.2.2019 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto) ஒன்றினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையொப்பத்துடன் வெளியிட்டார்.

33 அம்சங்களைக் கொண்ட அந்த அறிக்கைதான் இரு நாள் மாநாடுகளின் கதாநாயகன் என்று சொல்லவேண்டும்.

மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர் கள் அந்த அறிக்கையைப் பெரிதும் பாராட்டினர். காலத் தால் வெளியிடப்பட்ட ஆவணம் - கருவூலம் என்று ஒருமனதாக அனைவரும் பாராட்டினர்.

அந்த அறிக்கையை விளக்கி நேற்று (5.2.2019) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது!

சிறப்புக் கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார்.

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி வரவேற்புரையாற்றினார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை யாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்க உரையாற்றினார். திராவிடர் கழக மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.

இந்தச் சிறப்புக் கூட்டத்திற்கு ஏராளமான இளைஞர் கள், புதுமுகங்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராசிரியர் சுப.வீ. குறிப்பிட்டதுபோல, 19 ஆம் நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப் பட் டது. 20 ஆம் நூற்றாண்டில் நீதிக்கட்சியின் சார்பில் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை வெளியிடப் பட்டது.

21 ஆம் நூற்றாண்டில் கடந்த 23 ஆம் தேதி திரா விடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையொப்பமிட்ட இந்த அறிக்கையினை வெளியிட்டார்.

இது தேர்தல் நேரம், அரசியல் கட்சிகள் இன்னும் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. ஆனால், தேர் தலில் போட்டியிடாத திராவிடர் கழகம் வெளியிட்ட இந்த அறிக்கையை முதல் தேர்தல் அறிக்கையாகக் கொள்ளவேண்டும் என்றார் பேராசிரியர் சுப.வீ.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் இரு அணிகள் பிரிந்து நிற்கின்றன. ஒரு அணியில் ஜாதி, மதவாத பிற்போக்குக் கட்சிகள் அணி சேர்ந்துள்ளன. (கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்று அந்த அணியின் செய்தித் தொடர்பாளர் மனந்திறந்து ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொட்டி விட்டார்).

இன்னொரு அணி - தி.மு.க. தலைமையில் அணி வகுத்து நிற்கிறது. இந்த அணியில் சமுகநீதி, மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலன், ஒடுக்கப் பட்டோருக்குக் குரல் கொடுக்கும்  சக்திகள், மாநில உரிமை களுக்காகப் போராடும் சக்திகள் எல்லாம் ஓரணியாய் நிற்கின்றன.

பாரதீய ஜனதா கட்சி தலைமையில் பல கட்சிகள் இணைந்திருந்தாலும், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டாலும் கூட்டணிக்குப் பெயர் தேசிய ஜனநாயகக் கூட்டணியே! (ழிணீவீஷீஸீணீறீ ஞிமீனீஷீநீக்ஷீணீவீநீ கிறீறீவீணீஸீநீமீ). (இது பி.ஜே.பி. கட்டளை - அடிபணிந்துதானே ஆகவேண்டும்).

பி.ஜே.பி.யைப் பொறுத்தவரையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை உடையதாகும். இவற்றை விமர்சிக்கும் திராணி அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் யாருக்கும் கிடையாது.

தி.மு.க. தலைமையில் அங்கம் வகிக்கும் கட்சிகளி டையே அடிப்படை ஒற்றுமை உண்டு. பி.ஜே.பி. சொல்லும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பவற்றை ஏற்காத கட்சிகள் அவை.

திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையில், 17 ஆவது அம்சமாகக் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:

ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கிடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை  நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.''

திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் இந்தக் கருத்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கான வாசகம் என்றே கருதப்படவேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கூறியது மிகவும் சரியானதே!

திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் விளக்கவுரை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 65 மணித்துளிகள் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கைக்கான விளக்க உரையாக தனது சொற் பொழிவை அமைத்துக் கொண்டார்.

எடுத்த எடுப்பிலேயே இந்த அறிக்கையை யாரும் விவாதிக்கலாம்; மாறுபாடான கருத்து ஏதும் இருந்தால் தெரிவிக்கவும் செய்யலாம் என்று திறந்த மனத்தோடு தன் உரையைத் தொடங்கினார்.

இந்த அறிக்கைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது என்பதை விளக்க வந்த ஆசிரியர் அவர்கள் பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத் தத்துவமே இதன் மூலம் என்று குறிப்பிட்டார்.

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் இந்துத்துவாவிற்கு நேர் எதிரானதே இந்தத் திராவிடத் தத்துவம் என்று தன் உரையின் முகப்பாகவே இதனை எடுத்துக் கூறினார்.

இந்துத்துவா என்பது மனிதர்களிடையே பேதம் கற்பிப்பது. திராவிடம் என்பதோ பிறப்பில் அனைவரும் சமம் என்பதாகும்.

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை இதனை எடுத்த எடுப்பிலேயே தெளிவுபடுத்துகிறது.

ஈரோட்டில் கிராம அதிகாரிகள் மத்தியிலே உரை யாற்றிய தந்தை பெரியார் (31.10.1944) தனது உரையின் முடிவில் முத்தாய்ப்பாக கூறிய அமுத வரிகள்தான் "பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்'' என்பது. (நூல்: கிராம சீர்திருத்தம்'').

பக்கத்து வீட்டில் ஒருவன் இருக்கிறான், என்னைத் தொடக்கூடாது என்கிறான் - தீண்டாதே என்கிறான். இன்னொருவன் அயல் நாட்டுக்காரன் - ஆயிரம் மைல் களுக்கு அப்பால் இருந்து வருகிறான். என்னோடு கைகுலுக்குகிறான்; என்னைக் கட்டிப் பிடித்துத் தழுவு கிறான். இவர்களில் எனக்கு யார் அந்நியன்?'' என்ற தந்தை பெரியாரின் கூற்றை கழகத் தலைவர் எடுத்துச் சொன்னபொழுது, அரங்கமே அதிர கரவொலி!

என்னை அந்நியன் என்கிறது இந்துத்துவா - இதனைத் திராவிடத்துவா எதிர்க்கிறது. அதனைத்தான் இந்தக் கொள்கை விளக்க அறிக்கை வலியுறுத்துகிறது.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை ஒரு கட்சியை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் அளவுகோலே சமுகநீதிதான்.

தந்தை பெரியார் காங்கிரசை ஒரு காலகட்டத்தில் எதிர்த்ததற்கும், இன்னொரு கட்டத்தில் ஆதரித்ததற்கும் அதுவேதான் காரணம்.

இந்தக் கொள்கை விளக்க அறிக்கையின் ஒன்பதாவது அம்சம் என்ன கூறுகிறது?

ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத் துறை, அரசுத் துறை அனைத்திலும்.''

என்று இந்தக் கொள்கை அறிக்கை கூறுவது தந்தை பெரியார் அவர்களின் சமுகநீதிச் சிந்தனையின் அடிப்படையில்தான் என்றார் தமிழர் தலைவர்.

ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்று கூறுகிறார் பெரியார்; ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கப்படுவது ஏன் என்ற வினாவை நம்மை நோக்கி அன்றும் கேட்டனர்; இன்றும் கேட்கக்கூடியவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இந்த திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையின் 19 ஆவது அம்சம் இதுகுறித்து விளக்கம் அளிக்கிறது.

ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.''

இதற்குத் தந்தை பெரியார் 76 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய பதிலைத்தான் தமிழர் தலைவர் எடுத்து விளக் கினார்.

சட்டத்தின்மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது, சட்டத் தின்மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடுவது சிரமமான காரியமல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டத்தினால் ஜாதிகள் இல்லாமல் போகுமானால், பிறகு யாருக்கு நாம் பிரதிநிதித்துவம் கொடுக்கப் போகி றோம்? ஆகவே, அது தானாகவே மறைந்துவிடும். ஆதலால், ஜாதி வகுப்புகள் உள்ளவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பதும், குற்றமாகவோ, ஜாதியைக் காப்பாற்றியதாகவோ ஆகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று 1943 இல் தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டினார் கழகத் தலைவர்.

முடிவாக திராவிடக் கொள்கைத் தத்துவம் என்பது - மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளாதாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமானத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சம நிலைமை உருவாக்குவதாகும். இதனைத்தான் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை கூறுகிறது. இதுதான் திராவிடத் தத்துவமாகும்.

இந்தத் திராவிடத் தத்துவக் கொள்கை என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. உலகுக்கே - மானுடத்திற்கே சொந்தமானது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்; உலகமே ஒரு குடும்பம்'' எனும் நோக்கினைக் கொண்டது என் பதை இந்தக் கொள்கை அறிக்கையின் முடிவுரை முத்தாய்ப் பாகக் கூறுகிறதே!


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles