வானொலியில் தமிழ் மொழியின் செய்திப் பிரிவு முடக்கம்
சென்னை, ஜூலை 23 மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தபிறகு, மாநில மொழிகளில் செய்திக்கான நேரத்தில் மாநில மொழிகளுக்கு இடமில்லாமல் போனது.
தமிழில் வானொலியில் செய்திகள் என் றால், காலை 6.45 மணி முதல் 6.55 மணி முடிய மற்றும் பிற்பகல் 2.10 முதல் 2.15 முடிய மற்றும் மாலை 6.30 மணி முதல் 6.40 மணி முடிய மாநில செய்திகளும், காலை 7.15 முதல் 7.25 மணி முடிய மற்றும் பகல் 12.45 மணி முதல் 12.55 மணி முடிய மற்றும் மற்றும் இரவு 7.15 முதல் 7.25 மணி முடிய டில்லியிலிருந்தும் செய்திகள் ஒலிபரப்பப் பட்டன.
இந்த செய்தி ஒலிபரப்புகள் வானொலியில் தமிழ்நாட்டின் அனைத்து வானொலிச் சேவைகள் மூலமாகவும் விளம்பர ஒலிபரப் பான விவித பாரதியைத் தவிர்த்து சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம் புத்தூர் உள்ளிட்ட பல்வேறு வானொலி நிலையங்களில் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன.
அதேபோல், புதுவை வானொலி நிலை யத்திலிருந்து காலை, மாலையில் 6.05 மணி முதல் 6.10 மணி முடிய தமிழில் செய்தி ஒலிபரப்பானது. அரசுத் தரப்பு செய்தி என்றால், என்னதான் அரசின் ஊதுகுழலாக இருந்தாலும், அதில் நம்பகத்தன்மை என்பது மக்களிடம் இருந்தது.
தமிழுக்கு விரோதமாக....
நவீன தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து பரவிவருகின்ற நிலையில், அரசு வானொலியின் செய்தி அலைவரிசைகளின் சேவையை அதிகரிப்பதை விட்டுவிட்டு, இழுத்து மூடுகின்ற மத்திய அரசின் செயல் முற்றிலும் தமிழுக்கு விரோதமானதாகவே உள்ளதைக் காட்டுகிறது.
ஆனால், இன்றைய நிலை என்ன வென்றால், வானொலிச் செய்திகள் பண் பலை வழியாக அனைவராலும் செவிமடுக் கப்பட்டு வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. மணிக்கொருமுறை பண்பலை செய்திச் சுருக்கம் ஒலிபரப்பு உள்ளது. ஆனால், பண் பலை ஒலிபரப்பு அனைத்து கிராமங்களிலும் துல்லியமாக செவிமடுக்கின்ற வண்ணம் உள்ளதா என்பது கேள்விக்குறியே.
அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகள், இணைய தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரவினாலும், வானொ லிக்கும் ஓரிடம் அப்படியேதான் உள்ளது. சாலைகளில் பயணிப்போர் பண்பலை ஒலி பரப்புகளைக் கேட்காதவர்கள் எவருமிலர் எனலாம்.
திருச்சி வானொலி
திருச்சி செய்திப்பிரிவின் தமிழில் மாநிலச் செய்திகள், பண்பலை நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பண்பலையில் மணிக்கொருதரம் ஒலிபரப்பும் செய்திச்சுருக்கம் நிகழ்ச்சி, பொதுமக்கள் மத்தியில் முதலிடம் பிடித்துள் ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது திருச்சி மண்டலம் தவிர தென் மாவட்ட மக்களையும் ஈர்த்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி கழிமுக (டெல்டா) மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் தேயிலை, காய்கனி மற்றும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத் தறி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் தொடர்புடைய பிரச்சி னைகள் என அனைத்தையும் செய்திகளாக்கி தருகின்றது.
மண்டல செய்திப்பிரிவில் (துணை இயக்குநர் நிலை) செய்தியாளராக ஒருவரும், அவருக்கு அடுத்தநிலையில் இருவர் என மொத்தம் 3 பேர் செய்திப்பிரிவில் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு கீழ், பகுதி நேர செய்தி சேகரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பப் பிரிவு பணியா ளர்கள், நகல் எடுப்போர் உள்ளிட்ட தொடர் புடைய பல்வேறு பணிகளில் சுமார் 40 பேர் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இதில், செய்தியாளராகவும், உதவி செய்தியாளாரகவும், செய்தி வாசிப்பாளராக வும் பணியாற்றும் மூன்று அதிகாரிகளில்
இருவரை அதிரடியாக மாற்றம் செய்து மத் திய செய்தி மற்றும் விளம்பரத்துறை அறி விப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அவர் களுக்கு பதிலாக மாற்றுப் பணியாளர்கள் அறிவிக்கப்படாமல் அந்தப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. மேலும் செய்தி வாசிப்பாளரும் எந்த நேரமும் சென்னைக்கு மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத பகுதிகளில் முடக்க உத்தரவா?
இதேபோல இந்திய அளவில் மொத்த முள்ள 46 வானொலி நிலையங்களில் 4 இடங்களில் செய்திப்பிரிவுகளை மூட பிரச்சார் பாரதி அமைப்பு, மத்திய அமைச்சகத் தின் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியை முதன் மையாக நடைமுறைப்படுத்தாத பகுதிகளில் உள்ள மண்டல செய்திப்பிரிவுகளை மூடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவ தாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அந்தவகையிலேயே, தமிழகத்தில் திருச்சி மற்றும் இந்தூர், கொல்கத்தா உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள மண்டல செய்திப்பிரிவுகளைமூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் திருச்சி
வானொலி நிலைய மண்டல செய்திப்பிரிவு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தவிர தமிழ் மாநிலச் செய்தியில் மண்டல மற்றும் வட்டார பகுதிச் செய்திகளுக்கு முக்கியத் துவம் இருக்காது. மேலும் செய்திப்பிரிவு என்ற அமைப்பே இல்லாத நிலையில் செய்தி எவ்வாறு இருக்க முடியும் என்ற கேள்வியும் நேயர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
முதல் கட்டமாக செய்திப்பிரிவின் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதால், செய்திப்பிரிவில் பணிகள் இல்லை என்ற நிலை ஏற்படும். அதன் பின்னர் செய்திப்பிரிவே மாற்றம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக 40 பேரும், மறைமுகமாக பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டும் இதேபோன்ற முயற்சி நடந்தது. அப்போது செய்தி மற்றும் விளம்பரப்பிரிவு மத்திய அமைச்சராக வெங்கைய நாயுடு பதவி வகித்து வந்தார். இந்த மூடல் நடவடிக்கை மத்திய அமைச்சகத்துக்கு தெரியாமல் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டு, பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ததாக கூறப்பட்டது.
36 ஆண்டு சேவையை முடிவு கட்டுகின்ற மத்திய அரசு
சுமார் 36 ஆண்டு சேவையை முடிவுக்கு கொண்டு வரவுள்ளது திருச்சி வானொலி நிலைய மண்டல செய்திப்பிரிவு. இனி, திருச்சி மண்டலத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், விவசாயிகள், மீனவர் பிரச்சினைகள் குறித்த செய்திகள் இடம்பெறாது. தேசிய மற்றும் சர்வதேச செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். மாநிலச் செய்தியில் சென்னை தொடர்புடைய செய்திகளுக்கு
மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மண்டல செய்தியாளராகப் பணியாற்றிய உதவி இயக்குநர் நிலையில் உள்ள அதிகாரி, செய்திப்பிரிவிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு செய்தியில்லாத விளம்பரப் பிரிவு அதிகாரியாக (தற்போது காலியாக உள்ளது) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த இடத்திலிருந்த உதவிச் செய்தியாளர் பணி உயர்வு பெற்று அய்தராபாத் வானொலி நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 46 இடங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், திருச்சி வானொலி நிலையத்தின் செய்திப்பிரிவு, 14.11.1981 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களையும், திட்டங்கள் குறித்த தகவல்களையும், மீனவர்கள், விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் திட்டங்களையும் செய்திகளாக உடனுக்குடன் பொதுமக்களை அறியச்செய்வது, குறிப்பாக, மண்டல அளவில் பகுதி வாரியாக தகவல்களை சேகரித்து உடனுக்குடன் வழங்கி வந்தது.
காவிரி கழிமுகப்பதி (டெல்டா) விவசாயிகளுக்கு விவசாயத்துறை வல்லுநர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து நாள்தோறும் வழங்கி விவசாயத் தொழிலில் வழிகாட்டியாகத் திகழ்ந்த வானொலி திருச்சி வானொலியாகும். திருச்சி வானொலியின் செய்திப்பிரிவு மூடப்படுவதிலும், காவிரியில் தண்ணீர் வராமல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பதிலும் மத்திய அரசின் பங்களிப்பு என்பது தமிழருக்கு விரோதமாக, தமிழ்மொழிக்கு விரோதமாக இருப்பதையே உணர்த்துகிறது.