காவி வேட சாமியார்கள் நித்யானந்தா - ராம் ரகீம்களின் சரச லீலைகள் வெளிச்சத்துக்குவந்துவிட்டன
‘‘சாமியார்கள் ஒழிந்த நாடு - ஜாதியில்லாத சமூகம்'' உருவாக பிரச்சாரத் திட்டத்தை விரிவாக்குவோம் - அம்பலப்படுத்துவோம்!
சட்டங்கள் இவர்கள்மீது பாயட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
காவி உடை தரித்து திரை மறைவில் சல்லாப லீலைகளில் ஈடுபடும், சொத்துகளைக் குவித்து உல்லாச வாழ்வில் திளைக்கும் சாமியார்கள்மீது அரசு சட்டங்கள் பாயட்டும் - சாமியார்கள் ஒழிந்த நாடு - ஜாதி ஒழிந்த சமூகம் அமைக்கத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யா னந்தா என்ற ஒருவர் வேலையற்றுத் திரிந்த இளைஞன். சாமியார் ‘பிசினஸ்’தான் முத லில்லா வியாபாரம் என்று புரிந்துகொண்டு, காவி வேடம் போட்டு, மிகப்பெரிய மடாதிபதி போல் தன்னைக் காட்டிக்கொண்டு பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து, தன்னுடன் ஒரு ரவுடிக் கும்பல், அடியாட்களை வைத்துக்கொண்டு தனது சாம்ராஜ்ஜியத்தை சல்லாப ராஜ்ஜிய மாக்கிக் கொண்டு சொகுசு வாழ்வு வாழ்வதுபற்றி ஏடுகள் பல செய்திகளை வெளியிட்டன.
நவீன மின்னணு சாமியார்கள்!
குடும்பத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மூளைச்சாயம் ஏற்றி, அழைத்து வருவது, அங்கே ‘ஆன்மீகம்‘ என்ற பெயரால் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவது வேடிக்கையான வாடிக்கையாகும்.
இப்படிப்பட்ட நவீன சாமியார்கள் மின்னணு யுகத்தில் வாழ்வதால், அத்தனை மின்னணு (ணிறீமீநீtக்ஷீஷீஸீவீநீ நிணீபீரீமீts) கருவிகளையும் தங்களை விளம்பரப்படுத்திட புது வகை டெக்னிக்கு களைக் கையாண்டு, அறியாமையிலும், பக்தி போதையிலும் உழலும் பல பெண்களின் வாழ்வை நாசமாக்கும் சமூக விரோத செயல் களைத் தங்கு தடையின்றி நடத்தி, சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்!
வீடியோ உண்மையானதுதான்!
திரைப்பட நடிகை ஒருவருடன் இந்த நித்யா னந்தா உல்லாசமாக இருப்பதுபோல ஏழு ஆண்டுகளுக்குமுன் வெளியான ‘வீடியோ’ உண்மையானதுதான் என டில்லி தடயவியல் ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது!
இதையடுத்து அந்த நித்யானந்தா தலை மறைவானார். பிறகு திருவண்ணாமலை அருகே கருநாடகக் காவல்துறை கைது செய்து வழக்குப் போட்டது.
மக்களும், முற்போக்கு அமைப்புகளும் இந்த காஷாய சாமியார் வேடமணிந்த நபருக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்திய பின்னரே இவர்மீது வழக்குப் பாய்ந்தது!
உச்சநீதிமன்றம்வரை சென்று, இவருக்கு ஆண்மைப் பரிசோதனைகூட நடத்தப்பட்ட துண்டு. ஆண்மை இல்லை என்ற இவரது வாதம் பொய்யானது என்பது உறுதியானது.
ஓட்டுநர் அம்பலப்படுத்தினார்
ஏழு ஆண்டுகளுக்குமுன் இந்த காமாந்த காரன் - நடிகையுடன் சல்லாப சரச லீலையில் ஈடுபட்டதையெல்லாம் - அவரது காரோட்டி லெனின் கருப்பையாமூலமும், வீடியோ மூல மும் வெளியானது. போலி என்ற இவர் தரப்பு வாதம் பொய்யாக்கப்பட்டு, அது உண்மைதான் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
இவரையும், இவரது கும்பலையும் உடனே கைது செய்து, சிறையில் அடைப்பதோடு உரிய தண்டனையும் வழங்கப்படவேண்டும்.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்மீது நடத்தப்படும் சோதனைபோல, வருமான வரித் துறை இந்த மடாதிபதிகளின் கூடாரங்களிலும் சோதனை நடத்திடவேண்டும்.
காலிகள், சமூக விரோதிகளுக்கு இந்தக் காவி உடையும், ருத்ராட்ச வேஷமும் சரியான பாதுகாப்புக் கவசங்கள் - ‘ஆன்மீகம்‘ என்ற அர்த்தமற்ற ஒன்றைக் கூறி, அமோக பக்தி வியா பாரம் நடைபெறுகிறது தங்குத் தடையின்றி!
வடக்கே ஒரு ராம்ரகீம் சிங்
வடக்கே அண்மையில் பிடிபட்ட பஞ்சாப் காவிச் சாமியார் ராம் ரகீம்சிங் பற்றியும், அவரது சாலோக சாரூப, சாம்ராஜ்ஜியம்பற்றியும், தோண் டத் தோண்ட வரும் புதையல்போல பல்வேறு அருவருக்கத்தக்க, அரசுகளும், அரசியல்வாதி களான அதிகார மய்யங்களும்கூட நெருங்க முடியாத எல்லைக்குச் சென்று, மோசடி வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பாக நடத்திட, அன்றாடம் காமரசத்தில் நீந்தி, நீந்தி - ‘ஆன்மீகப் பணி செய்யும்‘ இந்த அதிவேக ‘அய்டெக்‘ சினிமா, கிரிக்கெட் சாமியாருக்குக் குண்டு துளைக்காத வீடாம்!
எப்படிப் பார்த்தீர்களா?
புல்லட் புரூப் வீடாம்!
பாலியல் வழக்கில் குற்றவாளி என்று நிரூ பிக்கப்பட்டு தண்டனை பெற்று சிறையில் உள்ள ராம் ரகீம் சிங் சாமியார் என்ற இந்தக் கயவன் - புல்லட் புரூப் முறையில் கட்டப்பட்ட வீட்டில் வாழ்ந்து வந்ததாக இன்று தகவல் வெளியாகியுள்ளது!
அரியானா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா என்ற அமைப் பின் தலைவன் - பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக் குவியல்! இவைகளையெல்லாம் நம் நாட்டு காவல்துறை, சி.பி.அய்., வருமான வரித்துறை கண்டுகொள்ளவேண்டாமா?
இவர்களைக் கண்டுகொள்ளாத ‘‘செலக்டிவ் அம்னீஷியா’’ ஏன் வரவேண்டும் ஆட்சியாளர் களுக்கு?
தேர்தல் பிரச்சாரத்தில்
மோடியோடு ராம்ரகீம் சிங்
பிரதமர் மோடியே இவரைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்கிட தேர்தல் நேரத்தில் பிரச் சாரம் செய்தார் என்றெல்லாம் ஊடகங்களில் செய்தி வெளிவந்ததே!
பிறகு அதிகாரிகளோ, வருமான வரித் துறையோ, சி.பி.அய்.யோ சாமியார் என்ற ‘‘ஸ்ரீமான் 420’’-அய் நெருங்க முடியுமா?
சாமியார்கள் ஒழிந்த நாடு -
ஜாதி ஒழிந்த சமூகம்
சென்ற வாரம் ‘ஜூனியர் விகடன்’ இணைப்பு ஒன்று இத்தகைய ‘சாமியார் வகையறாக் களை’ப்பற்றி பல்வேறு அரிய செய்திகளைத் திரட்டித் தந்துள்ளது.
நாம் இதனை முன்பே எச்சரிக்கை செய்யும் வகையில், தொடர் பிரச்சாரம் செய்து வருகி றோம்.
சாமியார்கள் ஒழிந்த நாடு
ஜாதி ஒழிந்த சமூகம்
- இவைதான் நமது இலக்கு!
இளைஞர்களே, மகளிர் தோழியர்களே! ஏமாறாமல் இருக்க இப்படிப்பட்டவர்களது கழற் றப்பட்ட காவி முகமூடிகளின் யோக்கியதை களைப்பற்றி நாடெலாம், உலகெலாம் பாயும் வண்ணம் பிரச்சாரம் செய்யுங்கள்!
பிரச்சாரம்
தீவிரப்படுத்தப்படும்!
விழிப்புற்று எழுக -
வீணர்கள் கொழுக்காமலிருக்க!
அரசும், காவல்துறையினரும் இதற்கான ஒரு தனிப் பிரிவையும் உண்டாக்கி, தொடக்கத்தி லேயே இதனைத் தடுத்து ஒழித்திட ஆவன செய்யவேண்டும் என்பதை வற்புறுத்துகிறோம்.
2018 இல் இந்த முழக்கப் பிரச்சாரம் நம்மால் தீவிரப்படுத்தப்படும்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
23.11.2017