இன்று - ஜனவரி 30 - அண்ணல் காந்தியடிகளை கோட்சே என்ற மதவெறியன் - மராத்திப் பார்ப்பனன் சுட்டுக் கொன்ற கொடூர நாள்!
அந்த மதவெறி நம் மண்ணில், மண்ணோடு புதைக் கப்பட்டிருக்கவேண்டும்!
ஆனால், அம் மதவெறியாளர்களே இன்று புதுப்புது ‘அவதாரங்களை'யெடுத்து, பன்மொழி, பன்மதம், பல கலாச்சாரம் பரவியுள்ள மதச்சார்பற்ற, சமதர்மத்தைக் - கொள்கையைக் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சட்ட அமைப்பையே அடியோடு மாற்றிடும் வண்ணம், இந்துத்துவா ஆட்சி நடத்துவதும், அதே நபர்கள் காந்தி யாரையும் வரித்துக்கொண்டு வக்கணைப் பேசுவதும், காந்தியாருக்குச் செய்யும் துரோகம் மட்டுமல்ல;
கோட்சேவுக்குச் சிலை திறக்கும் அளவுக்கு உள்ள இந்தக் கூட்டத்தின் இரட்டை வேடத்திற்கு முற்றுப் புள்ளி எப்போது....?
அய்ந்து மாநிலத் தேர்தல்களும் இதற்குப் பதிலாக அமையும் என்று நம்புகிறோம்.
இன்றேல், நாடு... கோட்சே நாடுதான்!
புரிந்துகொள்வீர்!